districts

img

ரூ.160 கோடியில் மேம்படுத்தப்படும் ஏரி: அமைச்சா் தகவல்

வானூர், செப். 11- கழுவேலி ஏரி மேம்பாட்டுப் பணிகளால் 29 கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அமைந்துள்ள கழுவேலி ஏரியில் நீர்வளத் துறை சார்பில் ரூ.160 கோடியில் புதிய கட்டமைப்பு வசதி களுடன், கடல்நீா் உள்புகு தலைத்தடுக்கும் வகை யில் தடுப்பணை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் செஞ்சி மஸ்தான் சனிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னா் அவர் செய்தி யாளா்களிடம் பேசுகையில், கிழக்கு கடற்கரைப் பகுதி யில் கழுவேலி ஏரி அமைந்துள்ளது. சுமார் 70 சதுர கி.மீ. பரப்பள வுள்ள இந்த ஏரி, மரக் காணத்தின் வடக்கே கட லில் இணைகிறது. ஏரி யில் தண்ணீா் தேக்கு தல், கடல்நீர் உட்புகு தலைத்தடுத்து விவ சாய நிலங்களைப் பாது காத்தல், நன்னீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் தடுப்பணை அமைத்தல், புதிய கரை அமைத்தல், நீர் கொள்ள ளவை அதிகரித்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணி கள் நடைபெற்று வரு கின்றன. இதன் மூலம் சுற்றுப்புற கிராமங்களான ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனு மந்தை, கந்தாடு, கொள்ளி மேடு, திருக்கனூா், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்போ், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவ னந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட 29 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படும். விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அமைச்சா் தெரித்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் த.மோகன், மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன் உட்பட பலர் உடன் இருந்தனா்.

;