districts

img

தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 11-  பெரியாரிய சிந்தனை யாளரும் எழுத்தாளரும் ஓசூர் சப்தகிரி மெட்ரிக் பள்ளியின் தாளாளருமான பேராசிரியர் வணங்காமுடி 20 ஆண்டுகளுக்கு மேலாக  ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துட னும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடனும் பயணித்து  வருகிறார்.  40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியை  சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இவரது எழுத்து  பணியை பாராட்டி தமிழ் நாடு அரசு தமிழ்ச்செம்மல் விருது வழங்கியுள்ளது.  இந்த நிலையில், தமுஎகச சார்பில் ஓசூரில்  எழுத்தாளர் வணங்காமுடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஓசூர்  செயலாளர் சம்பு முன்னிலை யில் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் பல பாலசுந்தரம் ஆகியோர் பாராட்டி பேசினார். விருதுபெற்ற வணங்காமுடிக்கு நினைவு பரிசினை மூத்த எழுத்தாளர் கமலாலயன் வழங்கி பாராட்டி பேசினார்.   இந்த நிகழ்வில் ஏற்புரை யாற்றிய வணங்காமுடி, “பெரியாரிய சிந்தனையைப் போலவே தமுஎகசவின் சிந்தனைகளும் உயர்வா னது” என்றார். தொடர்ந்து “வாசிப்பும் உரையாடலும்” என்ற நிகழ்வு நடைபெற்றது. எழுத்தாளர்கள் கமலால யன், பூவிதழ் உமேஷ், பெரியசாமி, சம்பு பங்கேற்ற னர்.