சென்னை,ஜூன் 14-
சென்னையில் முக்கிய பொழுதுபோக்கு இடங்க ளில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இது சுமார் 22 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது. இங்குள்ள பாம்பு பண்ணை, பறவைகள், முதலை பண்ணை உள்ளிட் டவற்றை ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து கண்டு செல்கிறார்கள். பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர். வன உயிரினங் களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போல் உருவாக் கப்பட உள்ளது. மேலும் சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையா ளர்களுக்கான வசதி மேம்பாடு, பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங் கள், அவற்றின் வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை அறிய அவற்றின் இருப் பிடங்களின் அருகில் கியூ ஆர் கோடு அமைத்தல், புதிய உள் கட்டமைப்பு வசதி, டிக்கெட் கவுண்டர், உணவகம், வாகன நிறுத்தும் இடம், உலகத்தரத்தில் அரங்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப் பட இருக்கிறது. இந்த சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெறஉள்ளதால் 6 மாதங்கள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.