districts

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது

கிருஷ்ணகிரி, மே 24-

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள இடையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் பையூர் என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழி யாக வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

   இது குறித்து காவேரிப்பட்டணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.