districts

img

கவாச் 360 மொபைல் செயலி சென்னை மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை

சென்னை,ஆக. 13-

     சிசிடிவி கேமராக் களையே கடந்து  செல்லும் திருட்டு வாகனங்கள் குறித்து தகவல் தெரி விக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை, சென்னை தனியார் கல்லூரி மாண வர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘கவாச் 2023’ என்ற பெயரில் சைபர் செக்யூரிட்டி ஹாக்கத்தான் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதுதிலும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து 3,600 குழுக்க ளாக மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 குழுக்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பல்வேறு பிரிவுகளில் நடை பெற்ற இந்தப் போட்டியில், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் கலந்துகொண்ட மாணவர்களின் கண்டு பிடிப்பான, ‘கவாச் 360’ என்ற மொபைல் ஆப் முதல் பரிசைப் பெற்றுள்ளது.

    சிசிடிவி உள்ள பகுதி களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்தச் செயலி மூலம், அது அரு கில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் ஆம்பு லன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்து விடும். அதேபோல், சிக்னலில் உள்ள சிசிடிவி கேமராக் களைத் திருட்டு வாக னங்கள் கடந்துசென்றால் அதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரி விக்கும் வகை யில் இந்தச் செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     இதுபோன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்தச் செயலி தேசிய அளவில் முதலிடம் பிடித்து ஒன்றிய அரசின் விருதைப் பெற்றுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சைபர் குற்றங்கள் நடை பெறுவதால், அவற்றை தடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    இதை மனதில் கொண்டு, கல்லூரி மாணவர்கள் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாக பயன்படுத்தி சைபர் குற்றங்கள் நிகழாமல் தடுக்க கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் வர வேற்பைப் பெற்றுள்ளது.