districts

img

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம்

விழுப்புரம், செப்.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் காணை ஒன்றிய  முதல் மாநாடு சங்க ரய்யா நினைவு அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்  ஏ.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். ஒன்றியச் செயலாளர் பி.சிவராமன்  வேலை அறிக்கையை சமர்பித்தார்.மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.கீதா,ஆர்டி.முருகன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  ஆர்.மூர்த்தி  நிறைவுரையாற்றினார். சடையப்பன்  நன்றி கூறினார்.  இம்மாநாட்டில், இலவச வேளாண் மின் இணைப்பு கேட்டு  காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பனமலை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழுவின் செயலாளராக ஏ.ராஜீவ்காந்தி  தேர்வு செய்யப்பட்டார்.