சென்னை, ஏப். 8- புராணங்களை சரித்திரமாக மாற்றத் துடிக்கும் பாஜகவை வீழ்த்துங்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வடசென்னையில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருவிக நகர் ஓட்டேரி மேம்பாலம் அருகிலும், ராயபுரத்திலும் ஞாயிறன்று (ஏப். 7) பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், வடசென்னையின் வளர்ச்சிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. குடிசைகளே இருக்கக் கூடாது என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியது தமிழ்நாட்டில் திமுக அரசு. ஆனால் வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தால் அதை மறைப்பதற்காக ஒன்றிய அரசு குடிசை மறைப்பு (வாரி யம்) வேலையை செய்து கொண் டிருக்கிறது. ஏழ்மை இருப்பதே தெரியா மல் இருப்பதற்காக திரை போட்டு மறைக்கிறார்கள். இந்த ஏழ்மைக்கு காரணம் ஒன்றிய பாஜக அரசுதான் என்று விமர்சனம் செய்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. இங்கே வந்திருப்ப வர்கள் ஏழையில் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால் பணக்காரர் கள் சிரிப்பில் அதை தேடிக் கொண்டி ருக்கிறது ஒன்றிய அரசு.
கறுப்புபணம் ஓழிந்ததா?
ஊழலை ஒழிக்கிறேன் என்று பேசிக்கொண்டே மிகப்பெரிய மகா ஊழலை தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினர் செய்துள்ளனர். அதற்கென புதிய சட்டம் கொண்டு வந்து அந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைத்து ஊழல் செய்துள் ளனர். 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனம், எப்படி பாஜகவிற்கு மட்டும் 200 கோடி ரூபாய் நிதி வழங்க முடிகிறது என்று கேள்வி எழுப்பினார். கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் வாஷிங் மெஷின் நமக்கு தேவையில்லை. உழைப்பாளியின் வியர்வையில் வெள்ளையாகும் பணம்தான் நாட்டை நல்ல முறையில் வழி நடத்தும்.
நாக்பூர் தலைநகராக மாறும்
கடந்த 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரெய்லர்தான். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகரை நாக்பூராக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். நாட்டில் எதற்கு இத்தனை மதங்கள், ஒரே மதமாக இருந்தால் நல்லதுதானே என ஒருசாராரின் கவனத்தை ஈர்ப்பார்கள். புராணங்களை சரித்திரமாக மாற்றப் போகிறார்கள். இந்திதான் ஆட்சி மொழி நீங்கள் அனைவரும் அதைத் தான் பேச வேண்டும் என்று கூறு வார்கள். ஒருவர் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட் டும் அது அவர்கள் விருப்பம். ஆனால் அதை திணிக்கக் கூடாது, அவர்களின் தாய் மொழியை அழிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம். மனிதம் தான் மதம். அதை தாண்டி என்ன இருக்கிறது. யார் தீர்மானிப்பது பாஜகவினர் உங்கள் வாக்கை மட்டும் கேட்கவில்லை. உங்கள் வாழ்க் கையை, வாழ்க்கை முறையை கேட்கிறார்கள். என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும், எது மாதிரியான உடை அணிய வேண்டும் என அவர்கள் தீர்மானிப்பார்கள். சிறுபான்மையினரை காக்கும் ஒரு பெரிய பலம்தான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கிறார்கள். எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை, மாநில உரிமையை, தாய்மொழியை பாதுகாக்க, தேசத்தை, உண்மையான வரலாற்றை பாதுகாக்க பாஜகவை வீழ்த்துங்கள். இந்தியா கூட்டணி வேட்பாளர் கலாநிதி உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளித்து மகத்தான வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.