districts

img

புதிய மின் விளக்குகள் அமைப்பு

கள்ளக்குறிச்சி, செப். 3 - கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் சாலையில் சிறுவங்கூர் ஊராட்சி பொது நிதி (2023-24)திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள். வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மக்களவை உறுப்பினர் மலையரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார்,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு துணைத் தலைவர் விமலா,சிறுவங்கூர் ஊராட்சி மன்றத்  தலைவர் சந்திரா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.