கள்ளக்குறிச்சி, ஜன. 24- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட 271 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த வைஷ்னவி (6) என்ற காது கேளாத சிறுமிக்கு காதொலி கருவி வேண்டி மனு செய்தார். மனுவை பரிசிலினை செய்த ஆட்சியர் உடனடியாக காதொலி கருவி வழங்க உத்தரவிட்டார். அதன்படி, ரூ.5,000 மதிப்புள்ள காதொலி கருவி வழங்கப்பட்டது.