districts

img

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, மார்ச் 29 - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருவதாக அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித் தார்.  சென்னை மாநகராட்சி 98வது வட்டம், அயனாவரம் சோலை அம்மன் கோவில் தெருவில் 75.41 லட்சம்  மதிப்பீட்டில் மாநகராட்சி  பூங்கா அமைக்கப்பட் டுள்ளது. இந்த பூங்காவில், சிறுவர்களுக்கான விளை யாட்டு திடல்கள், நடை  மேடைகள், அமரும் கல் நாற்காலி, உடற்பயிற்சி கருவிகள், நீருற்று உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை புதனன்று (மார்ச் 29) அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடசென்னை மேம்பாட்டிற்காக தமிழ்நாடு  அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை பயன்படுத்தி, கழிவு நீர், சாலை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அடிப் படை பிரச்சனைகள் சரி செய்யப்படும். சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரு கிறது. இந்த பேருந்து நிலை யம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் படும் என்றார். இந்நிகழ்வின்போது வில்லிவாக்கம் சட்டமன்ற  உறுப்பினர் அ.வெற்றி அழகன், 8வது மண்டலக் குழுத் தலைவர் கு.பீ.ஜெயின், 98வது வார்டு  கவுன்சிலர் ஆ.பிரிய தர்ஷினி, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முரு கேஷ், பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், திமுக பகுதிச் செயலாளர் வே.வாசு  உள்ளிட்டோர் உடனிருந்த னர்.