districts

கடப்பா - அரக்கோணம் மின்சார ரயில் இன்று முதல் 7 நாட்கள் ரயில்கள் ரத்து

சென்னை, அக். 15- ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்தடுத்து பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருப்பது  பயணிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதையொட்டி தென் மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 7 நாட்களுக்கு ரயில்கள் முழுவதுமாக மற்றும் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.  ஆந்திர மாநிலம் குண்டக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி யில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி 6 ரயில்கள் 7 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில் எண் 06401 கொண்ட அரக்கோணம் - கடப்பா இடையே இயக்கப்படும் மின்சார சிறப்பு விரைவு  ரயில் வரும் அக்டோபர் 16 முதல் 22ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 06402 கொண்ட கடப்பா - அரக்கோணம் சிறப்பு ரயிலும் 16 முதல் 22ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கடப்பா வில் இருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும்.

இதையடுத்து ரயில் எண் 07659 கொண்ட திருப்பதி - காட்பாடி பேசஞ்சர் சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்தாகியுள்ளது. இது திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 07582 ரயில் எண் கொண்ட காட்பாடி - திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும். மேலும் ரயில் எண் 06417 கொண்ட காட்பாடி - ஜோலார்பேட்டை மின்சார  ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இது காட்பாடியில் இருந்து தினசரி காலை 9.30 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் 06418 ரயில் எண் கொண்ட ஜோலார்பேட்டை - காட்பாடிமின்சார  விரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 16 முதல் 22ஆம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது.   பகுதியளவு ரத்து ரயில் எண் 16854 கொண்ட விழுப்புரம் - திருப்பதி விரைவு  காட்பாடி முதல் திருப்பதி வரை ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி உடன் நின்று விடும். இந்த ரயில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களுக்கு பகுதியளவு ரத்து செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. மறுமார்க்கத்தில் 16853 ரயில் எண் கொண்ட திருப்பதி - விழுப்புரம் விரைவு  திருப்பதி மற்றும் காட்பாடி இடையில் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் காட்பாடி உடன் நின்று விடும். இதுவும் அக்டோபர் 16 முதல் 22ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.