கள்ளக்குறிச்சி, நவ.23- மாநில அளவில் சிறந்த ஆலையாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கச்சி ராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சி ராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மாநில அளவில் சிறந்த ஆலையாக தேர்வு செய்யப்பட்டு. கடந்த நவ.21 அன்று புதுக்கோட்டையில் நடை பெற்ற 70 வது கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் முருகேசன் அமைச்சர் பெரிய சாமி கேடயம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, முதல் பரிசு பெற்ற கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் முருகேசன், மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன் குமாரிடம் பரிசுக்கான கேடயத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் கச்சிராயபாளையம் கூட்டு றவு சர்க்கரை ஆலை அலு வலக மேலாளர் ராமு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.