districts

img

கே.பரமேஸ்வரி, கே.பிரியா - கே.பூர்ணிமா 15வது ஆண்டு நினைவுதினம்

சென்னை விமான நிலைய விரிவாக்க போராட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் மக்களை அணிதிரட்டிய கே.பரமேஸ்வரி, அவரது மகள்கள் கே.பிரியா - கே.பூர்ணிமா ஆகியோரின் 15வது ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று (ஜன.22) அணுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பொழிச்சலூரில் அவரது நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, எஸ்.ஜெயசங்கரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், ப.ரேவதி, கிளைச் செயலாளர் ராமு உள்ளிட்டோர் பேசினர்.