districts

img

பட்டியல்-பழங்குடி மக்களுக்காக களத்தில் வலுவாக போராடும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட்!

 திருத்தணி, அக் 8-  வர்ணாசிரம கோட்பாட்டை கடைபிடிக்கும் மோடி அரசை வரும் நாடாளுமன்ற தேர்த லில் வீழ்த்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார்.  திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பட்டியல், பழங்குடி மக்கள் வாழ்வுரிமை கோரிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு; தமிழ்நாட்டில் ஆண்ட, ஆளும் கட்சிகள் என ஏராளமான அரசி யல் கட்சிகள் இருந்தும் பட்டிய லின மற்றும் பழங்குடியின மக்க ளின் பிரச்சினைக்கு இதுவரை  எந்த அரசியல் கட்சியும் போராட முன் வருவதில்லை. தரும புரி மாவட்டம் வாச்சாத்தி விஷ யத்திலும் இந்த நிலைதான் நீடித்தது.  பட்டியலின மக்களுக்கு அநியாயங்கள், அக்கிரமங்கள் நிகழ்கிற போது அப்பகுதி மக்களுக்கு களத்தில் நின்று போராடும் கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை பெரு மையுடன் சொல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்று தீண்டாமைக்கு எதிராக வும்,  சாதிய  ஏற்றத் தாழ்வுகள் எதிராகவும் அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி போராட்டினால் சாதி பாகுபாடுகளை களைய முடியும். ஆனால் எந்த கட்சி களும் வரவில்லை என்பது வேதனையளிக்கிறது.  பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இந்த மண்ணின் பூர்வ குடிகளாகும். இந்த நாட்டின் ஆதி சமூகமாகும்.  பொதுவாக மற்ற கட்சிகள் பட்டியலின மக்க ளின் வாக்குகளை அதிகாரத்திற்கு வர மட்டுமே பயன்படுத்து கிறார்களே தவிர அவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக அல்ல.  சட்டத்தின் முன்பு அனை வரும் சமம் என அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 சொல்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வு கூடாது. ஒரு மனிதனை சாதி யின் பெயரால், இனத்தின் பெய ரால், மொழியின் பெயரால்  பாலி னத்தால் பாகுபடுத்த கூடாது என்று அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. எதை அரசி யல் சாசனம் குற்றம் என்று சொல்கிறதோ,  அதுதான் நாடு முழுவதும் நடக்கிறது. காவல்துறை, சட்டம், நீதிமன்றம் இவைகள் இருந்தும்  சாதி அடிப்படையில் ஒடுக்கப்படுவது தடுக்கப்படாமல் உள்ளது.   திருவள்ளூர் மாவட்டம், ராஜா நகரத்தில் அரசு கொடுத்த நிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக  தலித் மக்கள் குடியேற முயல வில்லை  என்று சொன்னால் அதி காரிகள் என்ன செய்து கொண்டிருக் கிறார்கள்.  

சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? பட்டியலினத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதி காரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் இத்தனை ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகின்றனர். சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சொல்வது எப்படி சரியாகும். குற்றம் செய்வதில் சிறுபான்மை, பெரும்பான்மை பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமா.   கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 950 பட்டியல் இனத்தை சேர்ந்த வர்கள் படுகொலை செய்யப் பட்டனர். 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட அடக்கு முறையில் 50 ஆயி ரத்து 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாதது இன்னும் ஏராள மாக உள்ளன. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கொண்டாடி விட்ட பிறகும் கூட, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டை இன்று வரையில் அமல்படுத்த முடியவில்லை.  அயோத்திதாசர், திரு வள்ளுவர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், தோழர்கள் சீனிவாச ராவ், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து போராடி இருக்கிறார்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் பாட்டு தான் மிஞ்சி இருக்கிறதே தவிர சாதிகள் ஒழிய வில்லை. மாறாக மாணவர்கள் மத்தியில் கூட சாதி வெறி வன்மத்துடன் வளர்க்கும் ஆபத்தான போக்கு உள்ளது.  பழமைவாத, மனித உறவுகளை நாசம் செய்யும், சாதியை தூக்கி பிடிக்கும் வர்ணாசிரம கோட்பாட்டை கடைபிடிக்கும்  மோடி அரசு தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை  வரும் மக்களவைத் தேர்தலில் படு தோல்வி அடைய செய்ய முடிவு செய்திருக்கிறோம். இதற்கு தமிழ்நாடு மக்களும் ஆதர வளிக்கவேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.