districts

img

மண்ணுரிமையை தர மறுக்கும் ஆட்சியாளர்கள்

சென்னை, செப். 10 - மண்ணுரிமையை மட்டும் ஆட்சியா ளர்கள் தர மறுக்கின்றனர் என்று அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.பால பாரதி கூறினார்.  மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகமான எம்.பத்மாவதி நினைவகம் திறப்பு விழா செவ்வாயன்று (செப்.10) வடபழனி யில் நடைபெற்றது. இந்த அலுவல கத்தை திறந்து வைத்து கே.பாலபாரதி பேசியதன் சுருக்கம் வருமாறு:  உயிரோடு இருப்பதே சாதனை   சென்னை மாநகரில் பல லட்ச  குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல், கோவில் நிலங்களில், வாடகை வீடு களில், சாலையோரம் வாழ்கின்றனர். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மட்டும் போதுமா? மண் உரிமை வேண்டும்.  ஆனால் அதைமட்டும் தர  மறுக்கின்றனர். இதற்கெதிராக குடி மனைக்கான போராட்டத்தை முன்னெ டுப்போம். இன்றைய குழந்தைகளின் மன உலகத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. பச்சிளம் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.  போதைக் கலாச்சாரம்  சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனை யும், போதைக் கலாச்சாரமும் இந்த குற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளது. சிசுக்கொலை, பாலியல் வன்முறை, ஆணவக்கொலை, வரதட் சணை கொலை என இவற்றிக்கு மத்தி யில் பெண்கள் உயிரோடு இருப்பதே சாதனையாக பார்க்க வேண்டியுள்ளது. நுகர்வுக் கலாச்சாரம், கார்ப்பரேட் முதலாளிகள், சாதிய மற்றும் மதவாத சக்திகள் பெண்களை மையமாக வைத்தே இயங்குகின்றன. இதில் மாற்றத்தை உருவாக்க முற்போக்கு சக்திகளோடு இணைந்து செயலாற்ற வேண்டும். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ள னர்.  பல தொகுதியில் பெண் வாக்கா ளர்களே பெரும்பான்மையாக உள்ள னர். ஆனால், சட்டமன்றம், நாடாளு மன்றங்களில் பெண்களின் பிரதிநிதி த்துவம் குறைவாக இருப்பது ஏன்?  பெண்களை அமைப்பாக திரட்டும் போதுதான் இவற்றில் மாற்றத்தை கொண்டு வர முடியும். பெண்கள் மீதான வன்முறையை தடுக்க முடியும். பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். எனவே, அநீதிக்கு எதிராக பெண்களை அணி திரட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.  பரந்து செயல்படுவோம்  சங்க கொடியை மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஏற்று வைத்து கூறுகையில், தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கட்சியின் மாதர் அமைப்புக்கும் தனித்த அலுவலகங்கள் கிடையாது. கட்சித் தலைவர்கள் சொல்வதை கை கட்டி, காது கொடுத்து கேட்பவர் களாக பெண்களை வைத்துள்ளனர். இதற்கு நேர்மாறாக மாதர் சங்கம் செயல்படுகிறது. சமூக அநீதிகளுக்கு  எதிராக, அரசின் அடக்குமுறை களையும் மீறி வலுவான இயக்கங் களை நடத்தி வருகிறது. மாதர் சங்கத்தின் போராட்டத்தால் பெண்கள் கேள்வி எழுப்புகிற வர்களாகவும், உரிமையை நிலைநாட்டு பவர்களாகவும் மாறியுள்ளனர். அனைத்து தளங்களிலும் பரவி படர்ந்து, ஊடுருவி செயலாற்று வோம் என்றார்.  11,280 வழக்குகள் தேக்கம்  சங்கத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து மாநிலப் பொருளாளர் பிரமிளா பேசுகையில், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 11 ஆயிரத்து 280 போக்சோ வழக்குகள் தேங்கி கிடக் கின்றன. அரசு நிர்வாகம் குழந்தைகள் விவகாரத்தில் எவ்வளவு மெத்தனமாக உள்ளது என்பதற்கு இது ஒரு உதார ணம். கடந்த 8 மாதங்களில் தமிழகத் தில் 11 ஆணவக் கொலைகள் நடந்து ள்ளதாக வெளியுலகத்திற்கு தெரிந்துள் ளது, அதிலும் 2 ஆணவக் கொலை கள் தென்சென்னை பகுதியில் நடை பெற்றுள்ளது. ஆனாலும், தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர மறுக்கிறது. இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதி ராக தீவிர இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்றார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி வரவேற்றார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, தமுஎகச மாவட்டச் செய லாளர் அசோக் சிங், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி (சென்னை), ஜி.விஜயலட்சுமி (தாம்பரம்), எழுத்தாளர் எஸ்.வி.வேணு கோபாலன், காருண்யா ஆகியோர் நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். மாவட்டப் பொருளாளர் ஜெ.ஜூலியட் நன்றி கூறினார்.