ரயில்வே தொழிலாளர்களின் ஒப்பற்றத்தலைவர் கே.ஆனந்தநம்பியார் 31வது நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு சிஐடியு தலைவர் சுகுமாறன், டிஆர்இயு பொதுச் செயலாளர் வி. ஹரிலால், மூத்த தலைவர் ஆர்.இளங்கோவன், இணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், துணைத் தலைவர் பேபி ஷகிலா, துணைப் பொதுச் செயலாளர் அருண்குமார் செழியன், சென்னை டிவிசன் தலைவர் சிவாஜி உள்ளிட்டோர் வீர வணக்கம் செலுத்தினர்.