சென்னை,ஏப்.26 - நாட்டில் தங்க நகை விற்பனையில் முன்ன ணியில் உள்ள நிறுவனங்க ளில் ஒன்றான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் ரூ.5ஆயிரம் கோடி முதலீட்டில் 100 புதிய ஷோரும்களை திறக்க திட்டமிட்டுள்ளது. சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய நிறு வனத்தின் மேலாண் இயக்கு நர் வர்கீஸ் ஆலுக்காஸ் இதனைத் தெரிவித்தார். நிறுவனத்தின் தயாரிப்பு களை மக்களிடம் நெருக்க மாக கொண்டு செல்ல நடிகர் மாதவன் நிறு வனத்தின் சர்வதேச விளம்பர துதுவராக நிய மிக்கப்பட்டுள்தாகவும் அவர் கூறினார். இந்தியாவில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய விரிவாக்கத் திட்டம் இது என்றும் அவர் தெரிவித்தார். கேரள மாநிலம் திருச்சூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உல களாவிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றும் வளைகுடா நாடு களிலும் விற்பனையை விரிவுபடுத்திய முதல் இந்திய நிறுவனம் என்றும் அவர் கூறினர். நாட்டில் விற்கப்படும் தங்க நகைகளில் பிஐஎஸ் 916 முத்திரை கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்த பின்னர் இதுகுறித்து வாடிக்கை யாளர்களிடம் விழிப்பு ணர்வை மேற்கொண்ட நிறு வனம் ஜோஸ் ஆலுக்காஸ் என்றும் வர்கீஸ் மேலும் தெரிவித்தார்.