districts

img

மின்சாரம் இல்லாமல் பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்

திருவண்ணாமலை, ஜூன் 16-

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், நீப்பத்துறை அருகே உள்ளது வெள்ளம்பட்டி கிராமம்.  இங்கு 250 க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

   இவர்களின் வீடுகள் மற்றும் தெருக்களுக்கு மின் விளக்கு அமைக்க கோரி மக்கள் கோரிக்கை வைத்த அடிப்படியில்,  அந்த ஊரில் உள்ள தெருக்களில் மின் கம்பங்கள் இறக்கப்பட்டது. மின் கம்பங்கள் இறக்கி 6 மாதங்கள் கடந்த பிறகும்,  அங்கு மின் கம்பியும் வரவில்லை, மின் சாரமும் வரவில்லை என்று மக்கள் பரிதவித்து வருகின்றனர்.  இந்நிலையில், தங்கள் பகுதிக்கு மின்சாரம் வாங்க கோரி, கிராம மக்கள் செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு அளித்த போது, செங்கம் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் ஏ.லட்சுமணன் உடனிருந்தார்.