districts

img

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க போக்குவரத்து நிர்வாகம் தடை

சென்னை,ஜன.24- சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தி லிருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  குறிப்பாக ஆம்னி பேருந்துகள், விரைவு  போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் இருந்து செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் போக்குவரத்து துறை அதிகாரி களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “பொதுமக்களின் நலன் கருதி சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தமிழ கத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப் படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட வேண்டும் எனவும், வட மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் மட்டும் கோயம் பேடு வரை இயக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூடத்தில் மாநில விரைவு போக்குவரத்து கழகம், மாநகர   போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் மற்றும்  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ ரிக்‌ஷா சங்கங்கள், நெடுஞ்சாலை காவல் துறை, சென்னை மற்றும் தாம்பரம் நகரக் காவல் ஆணையரகங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பொங்க லுக்குப் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநில விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் ஜனவரி 24ஆம் தேதி இரவு  முதல் கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்து களை இயக்கத் தொடங்கும் போது, ​​ஆம்னி  பேருந்துகள் நகருக்குள் நுழைய அனு மதிப்பது நல்லதல்ல. இதனால் மாநில அரசு மற்றும் மாநில விரைவு போக்குவரத்து கழகத் திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், தென் மாவட்டங்க ளுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்து களும், புதன்கிழமை (ஜன.24) இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த  உத்தரவு புதன்கிழமை இரவு 7 மணி முதல்  அமலுக்கு வந்துள்ளது. இதனை மீறி  சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்து கள் சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது.