districts

பணி ஆணை வழங்கல்

மயிலாடுதுறை, செப்.6 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் தரங்கை பேராயர்  மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இளங்கலை, முதுகலை கூட்டுறவு இறுதியாண்டு மற்றும் முது நிலை வணிக நிர்வாகம் இறுதியாண்டு படிக்கும் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத் திலிருந்து இயக்குநர், மேலாளர்கள், உதவி மேலாளர்கள் நேர்முக தேர்வு நடத்தி 15 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் மூலமாக பணி  ஆணைகளை வழங்கினர்.  முன்னதாக கூட்டுறவுத்துறை  தலைவர் முனைவர்.ஜோயல் எட்வின் வரவேற்றார். பணி ஆணை பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

;