districts

img

ஆங்கிலத் திறனை மேம்படுத்த கிரிக்கோ இங்கிலிஷ் அறிமுகம்

சென்னை, மார்ச் 26-  குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய கல்வி நிறுவனமாக திகழும் எஸ்ஐபி அகாடமி, கிரிக்கோ இங்கிலிஷ் என்ற ஆங்கில திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த திட்டம் குழந்தைகள் ஆங்கில மொழித் திறனை வளர்க்கவும் ஆங்கில மொழியை நன்கு புரிந்து கொள்ளவும் அதில் புலமை பெறவும் கல்வியில் வெற்றிபெறும் திறன் இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எஸ்ஐபி அகாடாமியின் நிர்வாக இயக்குனர் தினேஷ் விக்டர் கூறினார். குழந்தைகளுக்குத் தேவைப்படும் திறமைகளில் முக்கியமானது, விமர்சன சிந்தனையுடன் ஆங்கிலத்தில் நல்ல உரையாட வேண்டும் என்பதாகும். குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் ஆங்கிலப் பாடத்திட்டங்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். எங்கள் மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு சிறப்பாக ஆங்கிலப் பயிற்சி அளிக்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.