districts

img

புதிய ‘தன் சஞ்சய்’ காப்பீட்டு திட்டம் அறிமுகம்

சென்னை, ஜூன் 17- எல்.ஐ.சி. 'தன் சஞ்சய்' என்ற பெயரில் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை  அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உள்ளது. இந்த புதிய பாலிசி உத்தரவாதமிக்க வருவாய் பலனையும் கொண்டுள்ளது என்று எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்.ஐ.சி. வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம் சார்பில் ‘தன் சஞ்சய்’ என்ற பெயரில் பங்குச்சந்தை யுடன் இணைக்கப்படாத, தனிநபர், சேமிப்பு காப்பீட்டுத் திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இது பாலிசி தாரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வழங்குகிறது. இது முதிர்வுகாலத்தில் உத்தரவாதமான வருவாயை வழங்கும் திட்டமாகும். இந்த புதிய திட்டம் 5 முதல் அதிக பட்சமாக 15 ஆண்டுகாலத்துக்கு கிடைக்கிறது. பாலிசி பிரீமியத்தை பாலிசிதாரர் ஒரே தவணையாகவோ, தங்களுக்கு ஏற்ற வகையிலோ செலுத்தும் வசதி உள்ளது. பாலிசி தாரர் எதிர்பாராத வகையில் இறந்து விட்டால், அவர் தேர்வு செய்தபடி அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை மொத்தமாகவோ, 5 ஆண்டு களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையாகவோ வழங்கப்படும். அவசர தேவைக்கு பாலிசி தொகையில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளவும் இதில் வசதி உள்ளது. பாலிசி காலத்துக்கு ஏற்ப 3 வயது முதல் பாலிசி திட்டத்தில் சேர முடியும். எல்ஐசி முகவர்கள் மூலமோ, கிளைகள் மூலமோ, சேவை மையங்கள் மூலமோ இந்த பாலிசி திட்டத்தில் சேர முடியும். www.licindia.in.என்ற இணைய தளம் மூலமும் இந்த பாலிசி திட்டத்தில் சேரலாம்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.