தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் ஆரோக்கிய உபக்குழு சார்பில் ஞாயிறன்று திருவள்ளூரில் சர்வதேச மகளிர் தினம் மாவட்ட துணைத் தலைவர் பா.சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதில் பெண்களும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் மருத்துவர் அனுரத்னா, பாலியல் சமத்துவம் குறித்து முனைவர் நாராயணி சுப்பிரமணியன், மகளிர் தின வரலாறு ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பி.பத்மா, அறிவியல் பார்வையில் பெண்கள் என்ற தலைப்பில் கே.மஹபூ நிஷா ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ்பிரபு "ஆழ்கடல்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.சுப்பிரமணி நிறையுரை ஆற்றினார். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.நளினி வரவேற்றார்.