தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதனன்று (மார்ச் 8) தேனாம்பேட்டையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.கே.இளமாறன் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தெ.வாசுகி உள்ளிட்டோர் பேசினர்.