சென்னை. மே 4-
சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிலையத்தில் மின்னணு மற்றும் தொடர் பியல் துறை சார்பில் மே 3,4 தேதிகளில் “ ஜசி ரியாக்ட் 23” என்ற சர்வதேச அளவி லான கருத்தரங்கம் நடை பெற்றது.
துறைத் தலைவர் ஷெர்லி எட்வார்ட் அனை வரையும் வரவேற்றார். கருத்தரங்கின் ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் முன் னுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சி.வி. ஜெயகுமார், துணை முதல்வர் சி கோமதி ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.
சென்னை ஐஐடி இயற்பி யல் துறை பேராசிரியர் மனு ஜெய்ஸ்வால், சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
மின்னனு, 5ஜி தொழில் நுட்பம் மற்றும் நானோ தொழில்நுட்ப துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.
மியாமி புற்றுநோய் நிறு வன முதுநிலை மருத்துவர் விபா சாஸ்வால், கதிரியக்க மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ந்துவரும் செயல்பாடு கள் குறித்து காணொலி வாயிலாக உரையாற்றினார்.
ஓமன் தொழில்நுட்ப அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்த சுந்தர வடிவழகன், இணைய பாது காப்பு என்கிற தலைப்பில் - உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் கருத்தரங்கின் துணை ஒருங் கிணைப்பாளர் முனைவர் அனிதா கிறிஸ்டலின் நன்றி கூறினார்.