districts

img

சென்னை மக்களை ஈர்த்த சர்வதேச கைத்தறி மற்றும் உணவுத்திருவிழா

 சென்னை,மே 9- தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா நடைபெற்றது. சென்னை தீவுத்திடலில் கடந்த 28.04.2023 அன்று இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.   தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெச வாளர்கள், கைவினைக் கலைஞர்கள்  பயன்பெறும் வகையில் ஏற்பாடு  செய்துள்ள சென்னை விழாவில் தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகை கள், பட்டு சேலைகள், கோ – ஆப் டெக்ஸ்  துணி வகைகள், பூம்புகார் கைவினைப்  பொருட்கள் 70 அரங்கங்களில் இடம்  பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக்குழு வினரின் உற்பத்தி பொருட்கள் 75 அரங்கங்களில் காட்சிப்படுத் தப்பட்டன.  மேலும் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த  கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெற்று உள்ளன. 20 வெளி மாநிலங்களைச் சேர்ந்த கலை ஞர்கள், நெசவாளர்களின் படைப்பு கள் 83 அரங்கங்களில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உணவு வகைகள் கொண்ட அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியால் இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகள், முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலை கள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலை கள், பரமக்குடி காட்டன் சேலை கள், ராசிபுரம் தாழம்பூ போர்வை பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத் தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பாவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவி யங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர்  அணிகலன்கள், இயற்கை மூலிகை  பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப் பட்ட கலை பொருட்கள், துணிப்பை கள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற் பங்கள், பத்தமடைபாய் உள்பட ஏராளமான தயாரிப்பு கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலைநிகழ்ச்சிகள் தினந்தோறும் 5 க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கலைநயத்துடன் அமைக் கப்பட்டுள்ள நுழைவு வாயில் மற்றும் மாட்டு வண்டி சிற்பம் ஆகியவற்றுடன் ஏராளமான பொதுமக்கள் கண்டு  ரசித்தனர். செல்போன் விளையாட்டு களில் மூழ்கிப்போயுள்ள குழந்தை களுக்கு, மாற்று வழி காட்டும் வகை யில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கில் காகிதத்தால் கைவினை பொருட்களை உருவாக்கும் ஓரிகாமி முறையில் பல்வேறு கைவினை பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.