districts

வட்டியில்லாத பயிர் கடன்

கிருஷ்ணகிரி, ஜூன் 29-

    கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  

    இம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதி உள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக் கும் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

      பயிர் கடனாக தனி நபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரை யிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.  

      எனவே அனைத்து விவ சாயிகளும் உரிய ஆவ ணங்களுடன் தங்களின் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ங்களை அணுகி பயிர்கடன் பெற்று கொள்ளலாம்.