districts

வி.ஏ.ஓ.வை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

திருத்தணி,மே 12-  திருத்தணி அடுத்த அருங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர்  முரளி. அதிமுக பிரமுகரா வார். ஊராட்சி கிராம நிர்வாக  அலுவலராக (பொறுப்பு) ரகுவரன் என்பவர் பணி யாற்றி வருகிறார். இவரிடம் ஊராட்சி தலைவியின் கணவர் முரளி தொடர்ந்து மோதல்போக்குடன் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மே1-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் முரளி தலையீடு இருந்ததாக தெரிகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரகுவரன் திரு வாலங்காடு  காவல்நிலை யத்தில் மோசடி புகார் கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவி சரண்யா வின் கணவர் முரளியை போலீசார் கைது செய்தனர்.