சென்னை, ஜூலை 25 - மெட்ரோ ரயில் பணிக ளுக்காக, பனகல் பார்க்கில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதி லாக 1,596 புதிய மரக்கன்றுகள் நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே நடந்து வருகிறது. இது 26.1 கி.மீட்டரில் அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் பணி களுக்காக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, 7 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த வழிதடத்தில், கோடம்பாக்கம் - நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே தி.நகர் பனகல் பூங்காவில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், பனகல் பார்க் பூங்காவில் மெட் ரோ ரயில் பாதை பணிக்காக 133 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் பணி கள் முடிந்ததும், 1,596 மரக்கன்று கள் நட்டு வளர்க்கப்படும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக 22.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அந்த பகுதி எப்படி இருந்ததோ அப்படியே பசுமை மாறாமல் சுரங்க ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்றனர்.