திருவள்ளூர், ஜூலை 19-
மிளகாய் விவசாயிக ளுக்கு வங்கி கடனை தள்ளு படி செய்வது, இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் புன்னப்பாக்கம், மாகரல், திருக்கண்டலம், செம்பேடு, சென்னாங்கரனை, ராம தண்டலம் உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட கிராமங்களில் 2020-21 ஆம் ஆண்டு ஆச்சி நிறுவனம் மற்றும் நல்ல கீரை என்று அழைக்கப்படும் ஜெகன் ஆகியோர் இணைந்து, இயற்கை முறை யில் மிளகாய் விவசாயம் செய்தால் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை லாபம் ஈட்ட லாம் என ஆசை வார்த்தை களை சொல்லி தூண்டி விட்டுள்ளார்.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் செலவு செய்தால் போதும், அதற்கான தொகையை வங்கியில் கடனாக பெற்று விடலாம் என்றெல்லாம் கூறியுள்ள னர். மேலும் இயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து கள் எடுக்கும் கருவி ஆகிய வற்றையும் வாங்கி தருவ தாக கூறியுள்ளனர். இதனை நம்பி விவசாயிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதற்காக தாமரை பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் கடன் பெற்று தருகிறேன் என்றும் ஜெகன் தெரிவித்துள்ளார். இவர் 23 விவசாயிகள் பெயரில் ரூ.9.5 லட்சம் வரை யில் வங்கியில் விவசாயி களுக்கு தெரியாமல் கடன் பெற்றுள்ளதாக கூறப்படு கிறது. வங்கிக்கு சென்ற பிறகு தான், கடன் வாங்கிய தகவல் விவசாயிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆயிரம் விதைகள் நாற்று நட வேண்டிய நாற்றங் காலில், மூன்றாயிரம் விதை கள் நட்டால், நாற்றின் தரம் குறைந்து மகசூல் குறைந் துள்ளது. மேலும் உரங்களை கூட கால தாமத மாக கொடுத்தால். பெரு மளவு மகசூல் குறைந் துள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.
தவறான வழிமுறை களில் தான் மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை யுடன் கூறியுள்ளார்.வங்கி கடன் சுமை மற்றும் மிள காய் மகசூல் பாதிப்பு என இரண்டு விதமான தாக்கு தலினால் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.சம்பத் ஜூலை 13 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் புதனன்று (ஜூலை 19), தோட்டக்கலை துணை இயக்குநர் ெஜபக்குமாரி ஆனி, உதவி இயக்குநர் பூர்ணிமா, தோட்டக்கலை அலுவலர் சாதனா முன்னி லையில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் விசா ரணை நடைபெற்றது.
சரியான வழிகாட்டுதல் இல்லாததால், இயற்கை உரங்களை உரிய காலத்தில் வழங்காததால் மிளகாய் விளைச்சல் மகசூல் மிகவும் குறைந்து நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் வங்கி கடனை தள்ளு படி செய்ய வேண்டும் என விசாரணையின் போது விவசாயிகள் தெரிவித்தனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, ஊத்துக் கோட்டை வட்டச் செயலா ளர் எம்.பழனி, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.