சென்னை, செப். 25 - தேர்தல் வாக்குறுதிப் படி 70 வயது நிரம்பிய ஓய்வூ தியர், குடும்ப ஓய்வூதியர்க ளுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்ட 7வது பேரவை திங்களன்று (செப்.25) பெரியமேட்டில் நடை பெற்றது. மாவட்டத் தலை வர் பி.எஸ்.அப்பர் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் என்.ராமசாமியும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் ெஜ.பட்டாபியும் சமர்ப்பித்த னர். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ெஜகதீசன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் நல அமைப்பு மாவட்ட பொருளாளர் கு.பூபாலன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் கே. சுலோச்சனா, நா. மனோகரன், எஸ். பார்த்தி பன் உள்ளிட்டோர் பேசினர்.
தீர்மானங்கள்
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ7 ஆயிரத்து 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒன்றிய அரசு வழங்கும் அதேநா ளில் மாநில அரசு ஊழியர்க ளுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். 36 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்துவதோடு, காசில்லா சிகிச்சை அளிக்க வேண்டும், கம்யூடேஷன் தொகை பிடிக்கும் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், 7வது ஊதியக் குழு நிலுவைத் தொகை யான 21 மாத ஊதியத்தை அரசு ஊழியர், ஓய்வூதியம் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநில துணைத் தலைவர் த. குப்பன் நிறை வுரையாற்றினார்.