districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை தெற்கு 2 கிளை சார்பில் கல்வெட்டு

தோழர் என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை தெற்கு 2 கிளை, தாம்பரம் கோட்டம் சார்பில் பம்மல் மின்வாரிய அலுவலகத்தில் கல்வெட்டு திறக்கப்பட்டது. அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் கல்வெட்டை திறந்து வைத்தார். சென்னை தெற்கு மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், தெற்கு கிளை-2ன் செயலாளர் டி.அன்பழகன், கோட்டத் தலைவர் பி.டில்லிகுமார், செயலாளர் வி.டோமினிக் சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;