சென்னை பல்கலைக்கழகம் இலக்கியத் துறை சார்பில் புதுமைப்பித்தன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு பேராசிரியர் கோ.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் பாட திட்டக்குழு உறுப்பினர் முனைவர் அ.உமர் பாரூக் கலந்து கொண்டு “நூற்றாண்டுகள் கடந்த எழுத்துக் கலைஞன் புதுமைப்பித்தன்” என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக பேராசிரியர் ஆ.ஏகாம்பரம் வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் ப.ஞானஸ்ட் ரவிக்குமார் நன்றி கூறினார்.