districts

img

தரங்கம்பாடியில் சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தாளர் முகாம்

மயிலாடுதுறை, ஆக.25 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  சார்பில் சிந்துவெளி அகழாய்வு நூற் றாண்டு கருத்தாளர் முகாம் சனிக் கிழமை துவங்கியது. நூற்றாண்டு விழா வரவேற்புக் குழு  தலைவர் து.இளவரசன் தலைமையில் சீகன்பால்கு ஆன்மிக மன்றத்தின் கலையரங்கில் நடைபெற்ற முதல் நாள் முகாமில், கவிஞர் நந்தலாலா நோக்க வுரையாற்றினார்.  பாவெல்பாரதி தலைமையில் நடை பெற்ற முதல் அமர்வில் ‘இந்தியாவில் தொல்லியல் அகழாய்வுகள்’ என்ற தலைப்பில் ஆய்வறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். ராசி பன்னீர்செல்வன் தலைமையில் நடைபெற்ற 2 ஆவது அமர்வில், ‘சிந்து வெளி பண்பாட்டின் திராவிட அடித் தளம்’ என்ற தலைப்பில் ஆய்வறி ஞர் ஆர்.பாலகிருஷ்ணன் உரையாற்றி னார்.  அ.பகத்சிங் தலைமையில் நடை பெற்ற 3 ஆவது அமர்வில் ‘சிந்துவெளி  பண்பாட்டின் வணிக குறியீடுகளை வாசித்து கட்டுடைத்தல்’ என்ற தலைப் பில் ஆய்வறிஞர் பகதா அன்சுமலி உரை யாற்றினார்.  எம்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற 4 ஆவது அமர்வில், ‘ஹரப்பா பண்பாட்டின் அடையாளம் குறித்த அரசியலின் சிறப்பம்சங்கள், 4000 ஆண்டுகள் கடந்து இன்றும்’ என்ற  தலைப்பில் டோனி ஜோசப் இணைய  வழியாக காணொலியில் உரையாற்றி னார்.  தமுஎகச பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா, எழுத்தாளர் ச.தமிழ் செல்வன், திரைக்கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் களப்பிரண், சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் பால சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.