districts

img

குறைதீர்வு கூட்டத்தில் தனிநபர் தர்ணா

விழுப்புரம்,பிப்.12- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள் கிழமை மனு கொடுக்க வந்தவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விக்கிரவாண்டி வட்டம், கம்மாலர் தெரு,  கனகராஜ் என்பவர்  திங்களன்று (பிப்.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தினர். அப்போது அவர் தனக்கு சொந்தமான புலன் எண் 344/6பி, பட்டா எண் 349-ல் நான் குடியிருந்து வருவதாகவும், அதில் கலையரசன் என்பவர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, மண் கொட்டி  சமன் செய்து சொந்தம் கொண்டாடுவதாக கூறினார். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே மாவட்டஆட்சியர் இந்த பிரச்சனையில் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.