districts

img

புதுவை மருத்துவ மாணவர் கலந்தாய்வுவில் ஊழல்

புதுச்சேரி,நவ.22- புதுச்சேரி மருத்துவ மாணவர் கலந்தாய்வில் நடந்துள்ள ஊழல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் தெரி வித்துள்ளனர். புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி  கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை (நவ. 22) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி மாநில குழு அலு வலகத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.  திமுக மாநில அமைப்பாள ரும்,எதிர்கட்சி தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், துணை செயலாளர் சேது செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சோ.பாலசுப்பரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.முருகன்,

மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன்,கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, பிரபுராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பிறகு, செய்தியாளர்களை தலைவர்கள் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- புதுச்சேரியில் மருத்துவ மாண வர் சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் முறையாக நடத்துவதில்லை. நடப்பு ஆண்டி லும் மோசடி, ஊழல் நடந்துள்ளது. சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  புகார் தெரிவித்தும் அரசு பொறுப்பான பதில் தரவில்லை. மருத்துவ கவுன்சில் உத்தரவுகளை கூட மதிக்கவில்லை. நிகர் நிலைப் பல்கலை கழகங்களுக் கான உச்சநீதிமன்ற உத்தரவும் மதிக்கப்படவில்லை. இவற்றை யெல்லாம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்திற்கு செல்வது என்று முடிவு செய்திருக்கிறோம். மேலும், மக்கள் மன்றத்திற்கு கொண்டுசென்று பிரச்சாரமும் செய்வது என்று தீர்மானித்திருக்கிறோம். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை இயல்பாக நடக்கும் போது ஆண்டுதோறும் புதுச்சேரியில் மட்டும் குழப்பம் நிலவுகிறது. அரசின் உரிய இடங்களைக் கூட கேட்டுப் பெற வில்லை. முழுமையாக நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். மருத்துவ மாணவர் கலந்தாய்வு விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்திருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.

ஆனால், அவர் பல துறைகளை கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக இருந்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதில் இருந்து அரசு நிர்வாகத்தை உண்மையில் நடத்து வது ஆளுநர் தான் என்பது நிரூ பணமாகிறது. அதேபோல், புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரி யர்களை தற்காலிகமாக பணி அமர்த்துவது மோசடியான நடவடிக்கையாகும். படித்த இளை ஞர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது என்பதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பத்தாயிரம் பேர் புதிதாக வேலைக்கு எடுப்பாக ஆட்சி யாளர்கள் கூறினார்கள். பல்வேறு துறைகளிலும் காலிப் பணியிடம் இருந்தும் ஒருவரும் நியமிக்கப்பட வில்லை. விவசாயிகளுக்காக தொடங்கப் பட்ட பாசிக் நிறு வனத்தில் ரூ. 500 கோடி சொத்து உள்ளது. அந்த நிறுவனத்தை கூட தனியாருக்கு தாரை வார்ப்பது என்று முடிவு எடுத்து மூடுவிழா நடத்தி விட்டனர். முதல்வர் ரங்கசாமி கையெழுத்து போடாமல் இந்த நிறுவனத்தை மூடி இருக்க முடி யாது. அதிக நாள் முதல்வராக இருந்த ரங்கசாமி ஒரு அரசு சார்பு நிறுவனம் கூட அவரது ஆட்சி காலத்தில் திறக்கவில்லை. மாறாக மூடு விழா மட்டுமே நடத்தி வருகிறார். நிர்வாகத் திறமை யின்மையும் ஊழலும் தான் இதற்கு காரணம். இவ்வாறு தலைவர்கள் தெரி வித்தனர்.