சென்னை.ஆக,
13 வரும் 15–ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி இந்தியாவின் முன்னணி மின்னணு நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘விலை மதிப்பற்ற சுதந்திரம்’ என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை வரும் 20–ந்தேதி வரை இருக்கும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் மண்டல வணிகத் தலைவர் கே.எல். முரளி, கூறுகையில், "'சுதந்திரம் விலைமதிப்பற்றது' என்ற பிரச்சாரத்தின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் சுதந்திர உணர்வை மதிக்கிறோம் என்றார்.
குறிப்பிட்ட எல்ஜி தயாரிப்புகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் வெறும் 15 ரூபாய் செலுத்தி அந்த பொருளை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். மீதத் தொகையை மாதத் தவணையில் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.