districts

img

மூளை அழற்சியினால் பாதிக்கப்பட்டோரிடம் தற்கொலை எண்ணம் அதிகரிப்பு

சென்னை, பிப். 24-  உலக மூளை அழற்சி தினத்தை முன்னிட்டு  பிரிட்டன் மற்றும் மெக்ஸிகோ நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட இரண்டு புதிய முன்மாதிரி ஆய்வுக் கட்டுரைகள் மூளை அழற்சி நோயால் அவ தியுறுபவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் உணர்வும் சுயமான தீங்கு விளை வித்துக்கொள்ளும்  எண்ணமும் மேலோங்கி இருப்பதை கண்ட றிந்துள்ளன. “மூளையழற்சி நோயால் மன நலனில் ஏற்படும் விளைவுகள் என்ற சர்வதேச இணையதளம் சார்ந்த பிரிட்டன் ஆய்வானது 31 நாடுகளிலிருந்து 445 பங்கேற்பாளர்களை ஆய்வு செய்து மூளையழற்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 37.5 விழுக்காட்டினர் பேர் தாங்கள் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும் அல்லது அதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளதை வெளி யிட்டுள்ளது.   நியூரோசைக்யாட்ரி அண்டு க்ளினிகல் நியூரோசயின்சஸ்   என்ற இதழில் வெளியான மெக்ஸிகோ நாட்டு ஆய்வறிக்கை ஒன்று  120 நோயாளிகளிடமிருந்து தகவல்களை பெற்று ஆய்வு செய்ததில் இந்த நோயின் ஆரம்ப கட்ட நிலையில் உள்ள நோயாளிகளில்12.5 விழுக்காட்டினருக்கு பேருக்கு தற்கொலை செய்து  கொள்வதற்கான நடத்தை இருந்த தாகவும் இதில் பாதிபேர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் வெளி யிட்டுள்ளது. என்சபாலிடிஸ் சொசைட்டியின் ஆதரவுடன் இணைந்து வெளி யாகியுள்ள இந்த இரண்டு ஆய்வறிக்கைகளுமே  உலக மூளையழற்சி தினத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் வகையில் அமைந்துள்ளன என்கிறார் என்சபாலிடிஸ் சொசைட்டியின் தலைமை செயல் அதிகாரியும் இரண்டு ஆய்வு அறிக்கைகளின் இணை ஆய்வாளருமான டாக்டர் அவா ஈஸ்டன்.  

மூளையழற்சி நோயின் ஆரம்ப கட்ட நிலையில் இந்த நோயின் காரணமாகவோ, அல்லது அது மீண்டும் பாதிக்கும்போதோ மற்றும் சிலருக்கு குணமடைந்துவரும் நிலையிலோ ஏற்படும் தற்கொலை  எண்ணமானது அசாதாரணமானதல்ல என்றும் அது  மூளை அழற்சி நோயின் தீவிர அறிகுறி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  ஆய்வறிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மூளையழற்சி நோய் என்பது மூளையில் காணப்படும் அழற்சி அல்லது மூளைத்திசுக்களில் காணப்படும் வீக்கம் ஆகும். இது எந்த வயதினருக்கும்,  உலகத்தில் எந்த பகுதியிலும் இருந்தாலும் ஏற்படலாம். இது பொது வாக வைரஸினால் ஏற்படும் தொற்றினாலும் அல்லது ஒரு வரது நோய் எதிர்ப்பு சக்தி குறை யும்போதும் அவரை பாதிக்கிறது. உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்படுவதுடன் அதன் தீவிரத்தின் அடிப்படையில் 40விழுக்காட்டினர் உயிரி ழக்கின்றனர்.  இதில் வருந்தத்தக்க விஷயம் யாதெனில் இது தொடர்ச்சியாக மூளை சிதைவை ஏற்படுத்துவதால் 20விழுக்காடு நோயாளிகள், வலிப்பு, ஞாபகமறதி, கவனக் குறைவு, ஆளுமை மாற்றங்கள், பக்கவாதம், கேட்கும் தன்மை குறைதல் மற்றும் பார்வைக் கோளாறுகள், மனச்சோர்வு, பேசுவதிலும் இயங்கு வதிலும் சிக்கல் போன்ற பல கோளாறுகளால் பாதிக்கப் படுகின்றனர். இதில் சுமார் 80 விழுக்காடு நோயாளிகளுக்கு நடத்தையில் கோளாறுகள், பள்ளி யிலும் அன்றாட பணியிலும் குறைவான அறிவாற்றலுடனும் இயங்குதல் போன்ற நரம்பியல் கோளாறுகளின் தொடர் பாதிப்பு கள் ஏற்படுகின்றன.