கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை,டிச.25- கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம். சி., ஜூலை முதல் அக்டோ பர் வரை 8 டி.எம்.சி. தண் ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணை யிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். நவம்பர் 28 ஆம் தேதி கண்டலேறு அணையி லிருந்து முதலில் 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது. வழக்கமாக ஆந்திரா விவசாயிகள் கிருஷ்ணா கால்வாய் நீரை பயன் படுத்துவார்கள். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவ தால் அங்குள்ள விவசாயி கள் கிருஷ்ணா நீரை பயன் படுத்தவில்லை. இதனால் பூண்டிக்கு நீர் வரத்து அதி கரித்துள்ளது. இதனால் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஏரியின் நீர்மட்டம் 34.49 அடியாகவும் தண்ணீர் இருப்பு 2.979 டி.எம்.சி.யாகவும் உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து 1,235 கன அடியாக இருந்தது. பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக 650 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால் வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர்,டிச.25- ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப் பட்டபோது குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.சூளுர் பேட்டை ரயில்களில் சோதனை செய்த போது கேட்பாரற்று இருந்த 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
காசிமேட்டில் மீன்விலை சரிவு
ராயபுரம்,டிச25- காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் ஞாயிற்றுக் கிழமை(டிச.25) காலை மழையின் காரண மாக மீன்வாங்க வரும் வியாபாரிகள், பொது மக்கள் கூட்டம் குறைந்தது. இதனால் மீன்களின் விலை சரிந்தது. பெரிய வகை மீன்க ளான வஞ்சிரம், வவ்வால், பாறை, கொடுவா உள்ளிட்ட பெரிய மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.700க் கும், வவ்வால் மீன்-ரூ.550 -க்கும், கொடுவா-ரூ.500- க்கும் விற்பனை செய்யப் பட்டது. மீன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லா ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
செய்யூர் அருகே மின்சாரம் தாக்கி மாடுகள் பலி
செய்யூர், டிச. 25- செங்கல்பட்டு மாவட் டம், செய்யூரை அடுத்த பாளையூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி சனிக்கிழ மையன்று (டிச.24) மாடு கள் பலியாகின. வழக்கம்போல் வயல் வெளிக்கு மேய்ச்சலுக்குச் சென்று பசு மாடுகள் மீது மின் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து மாடுகள் மீது விழுந்துள் ளது. இதில் மேய்ச்சலில் இருந்த பாளையூர் கிரா மத்தை சேர்ந்த மாரி, மகேந்தி ரன், விநாயகம், வெங்க டேசன் ஆகியோரின் 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தன. தகவல் அறிந்து வந்த செய்யூர் காவலர்கள் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த மாடுகள் பலியாகி யுள்ளதாக பலியான மாடு களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாட்டின் உரி மையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்காணத்தில் கடல் சீற்றம்
விழுப்புரம்,டிச.25- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. இதனால், ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை ஓய்ந்ததால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை(டிச.25) மழை பெய்து வருகிறது. மேலும், கடல் அலைகளில் சீற்றம் அதிகமாகவுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால், மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தீப்பிடித்து எரிந்த டெம்போ வேன்
கடலூர்,டிச.25- சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (38) என்பவர் ஓட்டி வந்தார். வரும் வழியில் திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்டுச்சாலை அருகே வரும் போது திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தினார். அனைவரும் வெளியில் குதித்து உயிர் தப்பினர். ஆனாலும் தீயை அனைக்க முடியவில்லை. இதனால் வேன் எரிந்துகொண்டே இருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
திருவண்ணாமலை,டிச.25- திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் பா. ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தாமோதரன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்து தூய் மைப்படுத்தும் பணிக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கி பேசினார். 7 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தூய்மைப்படுத்துதல் பணி, ஹோமியோபதி மருத்து வம், வன உயிரினங்கள் முக்கியத்து வம், யோகாவின் முக்கியத்துவம், சட்டப்பாதுகாப்பு மற்றும் மாண வர்களின் கடமைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட உள்ளது. இறுதியாக மரக்கன்று நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம், ஆசிரியர் சங்க செய லாளர் ஜான்வெலிங்டன், ஆசி ரியர்கள் கு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி,டிச.25- கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறை வுற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் வேதனை
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் வேதனை கள்ளக்குறிச்சி,டிச.25- கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள னர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக படைப்புழுக்கள் தாக்குதல் காணப்பட்டது. இதையொட்டி பயிர்களுக்கு மருந்து தெளித்த னர். இருப்பினும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்கு தல் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவ சாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான அகர கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (44) தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 நாட்களுக்கு முன்பு மக்காச் சோளம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். படைப்புழு தாக்குதலுக்கு மருந்து தெளித்தும் பயனில்லை புழுக்கள் சாகாமல் உயிருடன் இருக்கிறது. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் நாசமாகி போனது. எனவே மக்காச்சோள பயிரை காப்பற்ற அரசு மருந்து வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜிப்மருக்கு ரூ.1340 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி,டிச.25- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,340 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன்பவார் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன்பவார் புதுச்சேரி யில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரியில் பிரசவத்தின்போது குழந் தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொ ரோனா பாதிப்பின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.300 கோடியளவுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி அளித்தது. ஆய்வ கம், ஐசியூ உள்ளிட்டவற்றை மேம்படுத்த இத்தொகை பயன்படுத்தப்பட்டது. புதுச்சேரியில், பிரதமர் மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் 6 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இவர்களில் 29 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். ஜிப்மருக்கு ஒன்றிய அரசு ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி வழங்கி வந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.1,340 கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தொற்றுநோய்களுக்காக சிறப்பு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் கொண்டு சிறப்பு மருத்துவமனை அமைக்க கருத்துருவை புதுச்சேரி அரசு அனுப்பினால் நிதி தரப்படும். அதே போல் அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டால் நிச்சயம் அதற்கும் நிதி தரப்படும். இவ்வாறுஅவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தனித்தனியாக நிதி ஒதுக்குகிறது. நடப்பு நிதியாண்டில் ஊதியத்துடன் சேர்த்து சுகாதாரத் துறைக்கு ரூ.1040 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”என்றார்.