districts

img

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு

சென்னை, ஆக.29- தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத் தேரி மற்றும் காட்டாங் கொளத்தூர் ஆகிய 4 நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தின் முகப்பில் வாகன நிறுத்தும் இடத்தின் அருகே தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ரயில் பெட்டி உணவகத்தை சென்னை கோட்ட மேலா ளர் விஸ்வநாத் ஈரயா தொடங்கி வைத்தார். உள்ளே இருந்தபடி 40  பேரும், வெளியில் நின்றபடி  110 பேரும், ரயில் பெட்டி  உணவகத்தின் மேற்கூரை யில் 26 பேரும் அமர்ந்து சாப்பிடலாம். தனியாருக்கு 2 வருட காலத்துக்கு ரூ.2.2 கோடிக்கு ரயில்வே இந்த ஒப்பந்தத்தை வழங்கி யுள்ளது. விரைவில் பொத் தேரி, பெரம்பூர் மற்றும் காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையங்களில் ெயில் பெட்டி உணவகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.