districts

img

பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடியில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

வேலூர், ஆக. 31- வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை ஆற்றின் குறுக்கே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. பொன்னை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முன்னிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பொன்னை ஆற்றின் குறுக்கே 1976 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டு புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்து, வலு விழந்தது. எனவே, பொன்னையாற்றில் வினாடிக்கு 61.000 கன அடி வரை வரும் வெள்ளத்தை தாங்கக்கூடிய அள வில் புதிதாக பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.  ஒரே சமயத்தில் இரண்டு பேருந்து கள் செல்லும் வகையில், பாலத்தின் இரு புறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதைகளுடன் பெரிய அளவில் கட்டப்பட்டது. நிலம் எடுக்கும் பணிக்கு  ரூ. 9 கோடி ஒதுக்கீடு பாலம் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் எ.வேலு,“வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு பணி களுக்காக ரூ. 9 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரை வில் நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டு அது முடிவுற்ற உடன் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப் படும்”என்றார். இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர், நெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் துறை இரா. செல்வராஜ்,  வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலெட்சுமி, மக்களவை உறுப்பினர்கள் முனைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், து.மு. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன், வி. அமுலு விஜயன், ஜெ.எல். ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.