விழுப்புரம்,நவ.18- விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் லம்பி (தோல்கலவை) நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில், “ஏனாதிமங்கலத்தில் பொது மக்களின் எதிர்ப்பையும், மீறி தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் பாதிக் கும் என்பதால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். லம்பி நோய் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளால் மனிதர்களு க்கும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சம் நிலவி வருவதால் கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி கால்நடை களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த கோட்டாட் சியர், “விவசாயிகளின் கோரிக்கை கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண ப்படும்”என்றார்.