சென்னை, ஏப். 18- சென்னை மாநகராட்சி கத்தி வாக்கம் ரயில் நிலையம் அருகி லுள்ள ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் நியமிக்கப்படுவாரா? என திரு வொற்றியூர் மண்டலக் கூட்டத்தில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கேள்வி எழுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் தலைவர் தனியரசு தலைமை யில் நடைபெற்றது. 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெய ராமன் பேசியதாவது:- மழைநீர் கால்வாய் அமைத்த பகுதிகளில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு தெரு விளக்குகள் அகற்றப் பட்டது. கால்வாய் அமைக்கும் பணி கள் முடிந்து ஓராண்டை கடந்தும் அந்தப் பகுதிகளில் மீண்டும் தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. மின்விளக்கு கொள்முதலுக்கு பிப்ரவரி மாதம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. 3 மாதங்கள் ஆகியும் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் வேலை வாங்கவில்லை. விளக்குகள் பொருத்தும் பணியை துவக்குகிறோம் என்றார்கள். ஆனால் 3 மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருட்டில் இருக்கும் ஜோதி நகர் 8ஆவது தெருவில் விளக்குகள் எரியுமா? சாலைகள் 4ஆவது வார்டில் 87 சாலைகளை பராமரிக்க தீர்மானம் நிறைவேற்றி 6 மாதங்கள் கடந்தும், இதுவரை டெண்டர் கோரப்படவில்லை. அந்தப் பணிகள் எப்போது தொடங்கும். கன்னியலால் லே அவுட், காந்தி நகர், எர்ணீஸ்வரர் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் அரை மணி நேரம் கூட வரவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அடைப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றார்.
மழைநீர் கால்வாய்
மழைநீர் கால்வாய் அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக டி.எஸ்.கோபால் நகர், மகாலஷ்மி நகர், பஜனை கோயில் தெரு, கிழக்கு பஜனை கோயில் தெரு, தெற்கு மாகாளியம்மன் கோயில் தெரு, பெருமாள் கோவில் தேரு, முருகப்பா நகர் பிருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில் பணி நடைபெறா மல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பணிகளை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் மருத்துவமனை
கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகிலுள்ள ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரும் இல்லை. மருந்துகள் இல்லை. இதனால் நோயாளிகள் திருப்பி அனுப்புவதாக புகார் வருகிறது. அங்கு, உடனடியாக மருத்துவரை நியமித்து, தேவையான மருந்துகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்த மண்டல அலுவலர், ஒரு வாரத்தில் சாலை பணிகளுக்கு டெண்டர் கோரப்படும் என்றும் தெரு விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய தெரு விளக்குகள் அமைக்கப்படும், பழுதடைந்த தெரு விளக்குகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றும் கூறினார். ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் மருத்துவர் நியமிக்கப்படும், மருந்துகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.