சென்னை,ஜன.9 சென்னை பெருநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சி அவசி யம் என்பதை அரசு முழுமை யாக உணர்ந்துள்ளதாக ஆளுநர் உரையில தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி திங்களன்று ஆற்றிய உரையில், சென்னைப் பெருநகரப் பகுதிக்கான போக்கு வரத்துத் திட்டங்களைத் தயாரிக்கவும், பல்வேறு துறைகளால் செயல்படுத் தப்படும் போக்குவரத்து அமைப்புகளையும், சேவைகளையும் ஒருங் கிணைத்திடவும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் 2010 ஆம் ஆண்டில் அமைக் கப்பட்டது. பல ஆண்டுக ளாக செயல்படாமல் இருந்த இக்குழுமத்திற்கு, இந்த அரசு புத்துயிர் அளித்துள் ளது. கடந்த நவம்பர் மாதத் தில் இக்குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் தலை மையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறை, பல்வழிப் போக்குவரத்துத் திட்டம், பெண்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். சென்னை நகரின் வேகமான வளர்ச்சி நீடித்து நிலைக்கத்தக்கதாக இருக்க வேண்டுமெனில், இந்தப் பெருநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சி அவசியம் என்பதை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. இந்த வகையில், சென்னைக்கு அருகே உள்ள மாடம்பாக் கத்தில் 600 ஏக்கர் பரப்பள வில், நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சிப் பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்களைப் பெற்றுத் திரட்டி, திட்ட மிட்ட வளர்ச்சிக்கு ஏது வாக பல்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு ஏற்ற வாறு அவற்றை நில வகைப்பாடு செய்து, நில உரிமையாளர்களுக்கு பங்கீடு செய்து வழங்கி, புற நகர் வளர்ச்சிக்கு வித்திடும் பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்ற பெரும் பாலான நில உரிமையா ளர்கள் மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ள இப்பணி கள் விரைவில் நிறைவுறும் என்று அதில் கூறப்பட்டுள் ளது.