districts

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்

சென்னை, ஏப். 20 - பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொ டுமை செய்ததாக பதிவான வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத் தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்தபோது, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகார்  அளித்தனர். அதன்பேரில் அவர் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தில்லியில் தலைமறை வாக இருந்த அவரை கடந்தாண்டு ஜூன் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபா மீதான புகார்களின் அடிப்படையில் மொத்தம் 8 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றிலும் கைது செய்யப்பட்டார். இதில், 6 வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் பெற்றார். முதலில் கைதான வழக்கில் சமீபத்தில் உச்சநீதி மன்றத்திலும் ஜாமீன் பெற்றார். பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய் ததாக பதிவான வழக்கில் (4/2021) பினை கோரிய மனுவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதி மன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் பினைக் கோரி சிவசங்கர் பாபா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பினை வழங்கி உத்தர விட்டார். அவரது பாஸ்போர்ட்டை செங்கல் பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும், விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் கூடுதல் நிபந்தனைகளை நீதிபதி விதித்தார்.