districts

ஆபத்தான அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட விவசாயி

சென்னை, நவ. 30-  இதயத்திலிருந்து பெருந்தமனி மற்றும் உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்ட பாதிப்பு காரணமாக சென்னை வடபழனி போர்டீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  68 வயது விவசாயி உரிய நேரத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் உயிர்பிழைத்தார். இவர் ஏற்கனவே 2007ஆம் ஆண்டு பெருந்தமனியில் ஏற்பட்ட பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவருக்கு செயற்கை வால்வு பொருத்தப்பட்டது.  காலப்போக்கில், கால்சியம் படிவுகள் காரணமாக வால்வு சிதைந்தது, இதனால் இதய வால்வு குறுகி ரத்த ஓட்டம் தடைப்பட்டது.   இம் மாத துவக்கத்தில் கடுமையான  மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெருந்தமனிக்கு செல்லும் முக்கியமான வால்வை மாற்றியமைத்து உயிரி தொழில்நுட்பத்திலான  செயற்கை வால்வு பொருத்தப்பட்டதாக இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணியின் கூறினார். அதிக சிக்கல் இல்லாத அறுவைசிகிச்சை இது என்பதாலும், குணமடையும் காலம் விரைவு என்பதாலும், வயதான அல்லது இணை நோய்கள் உள்ள நோயாளி களுக்கு இத்தகைய அறுவை சிகிச்சை  பரிந்துரைக்கப்படும்.  மேலும்  3 நிமி டங்களுக்கும் குறைவான நேரமே இதற்கு தேவைப்படும் என்று என்று மருத்துவர் கோவினி பாலசுப்பிரமணியன் கூறினார். உரிய நேரத்தில் நோயாளியை போர்டீஸ் நிபுணர் குழு பரிசோதித்துத் தேவையான சிகிச்சையை வழங்கியதால் அவருக்குப் புதிய வாழ்க்கை கிடைத்தது என்று மருத்துவமனையின் நிர்வாகி வேங்கட பணீதர் நெல்லுரி குறிப்பிட்டார்.