districts

img

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் தினசரி நாளங்காடி

ராணிப்பேட்டை, பிப். 5- ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மைதானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ் ரூ.11 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் 8.30 ஏக்கர் பரப்பளவில் தினசரி நாளங்காடி கட்டு மான பணிக்கான அடிக்கல்நாட்டு விழா ஞாயிறன்று (பிப். 5) நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி னார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டி னார். இதில் நகராட்சி பொறியாளர் ரூத்ரகோட்டி, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், நரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் வாலாஜா ஒன்றியம் விசி.மோட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

;