புதுச்சேரி, நவ.13- தீபாவளிக்கு அறிவித்த ரூ.1,500 ஐ வழங்காததை கண்டித்து ஆட்டோ தொழி லாளர்கள் புதுச்சேரி அமைப்புசாரா தொழி லாளர்கள் நலச்சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி முடிந்து 10 தினங்களுக்கு மேலாகியும் அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு ரூ. 1,500 கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே உடனடி யாக இத்தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கொட்டும் மழையில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில சிஐடியு தலைவர் பிரபுராஜ், பொதுச் செயலாளர் சீனுவாசன் நிர்வாகிகள் மதிவாணன், விஜயகுமார், குமார் உள்ளிட்ட திரளான பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.