districts

img

கல்விக் கொள்கையை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தல்

சென்னை,மார்ச் 25- கல்விக் கொள்கையை உருவாக்குவதில் மாநிலங்க ளுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று உயர்க் கல்வித்  துறை அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தினார். இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:- ஒன்றிய பாஜக அரசு வெளி யிட்டுள்ள கல்விக் கொள்கை யில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக் கெல்லாம் பொதுத்தேர்வை நடத்தச் சொல்கிறது. இத னால் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரிக்கும். இந்திய மாநிலங்கள் மொழி, கலாச்சாரத்தால் வேறு பட்டுள்ளன. அதனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற கல்விக் கொள்கையை உருவாக்க அதிக உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலை மையில் வல்லுநர் குழு அமைக்கப்  பட்டுள்ளது. உயர்கல்வியில் அதிக அளவில்மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்மட்டும் போதாது தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்ய ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் தலை வர் டி.ஜி.சீதாராம் பேசுகை யில்,“உயர்கல்வியில் தொழிற் கல்வியை எளிதாக்க பொறியி யல் சார்ந்த பாடப் புத்தகங்கள் தமிழ்உள்ளிட்ட 13 மொழி களில் மொழிபெயர்த்து இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க, தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு வரு கிறது”என்றார். ஜி.விசுவநாதன் விஐடி வேந்தர் ஜி.விசு வநாதன் பேசுகையில்,“ இந்திய அளவில் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 50 விழுக்காடாக உள்ளது. வரும் காலத்தில் இது 75 விழுக்காடாக உயர வேண்டும். நாடு முழுவதும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர வேண்டும். அதற்கு ஒன்றிய, மாநில அரசு கள் உதவ வேண்டும். உயர்கல்வி யில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு அரசு, பிற மாநிலங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்”என்றார். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக் கான கல்வி மேம்பாட்டு சங்க துணைத் தலைவர்கள் எஸ்.மலர்விழி, எம்.ஆர். ஜெயராம், விஐடி துணைத் தலைவர்கள் ஜி.வி.செல்வம், சேகர் விசு வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.