கடலூர், ஜூன் 7-
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வெப்ப சலனம் காரணமாக அனல் காற்று வீசி வந்தது. கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலு மாக முடக்கியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் முக்கிய சாலை களில் மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் பெரு மளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில், பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட் டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து கடும் சேதத்தை விளைவித்தது.